உடன் பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. ஆடியோ வெளியாகி அம்பலம்..திருமலை திருப்பதியில் அதிர்ச்சி சம்பவம்…

Default Image
  • உலகிலே பணக்கார கடவுளான திருமலை திருப்பதி ஏழுமலை தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீவேங்கடேஸ்வரா பக்தி சேனல் தனியாக உள்ளது.
  • இதன்  சேர்மனும் தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி காமெடி நடிகருமான பிருத்விராஜ், அதே சேனலில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் பாலியல் தொல்லை கொடுத்து பேசிய ஆடியோ ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பக்தி சேனலில் மொத்தம் 255 ஊழியர்கள் வேலை செய்து வரும் நிலையில், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஆண் ஊழியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஏற்கனவே பல பாலியல் புகார்கள் வந்த படி உள்ளன.இந்நிலையில் இந்த சேனல் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவர், இதன் தலைவரான  நகைச்சுவை நடிகர் பிருதிவிராஜ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருப்பதியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான ஏஐடியுசி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

Image result for thirupathi devasthanam tv

இதற்கிடையே இந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் இல்லை என்றும் தன்  புகழுக்கும் பெருமைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த புகார் கொடுத்திருப்பதாகவும் நடிகர் பிருத்விராஜ் விளக்கம் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், தேவஸ்தான விஜிலென்ஸ் குழுவினர் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் நாடையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்