ஆட்டோவில் இருந்த பெண்ணிடமிருந்து போனை பறித்த திருடர்கள் – கீழே விழுந்து உயிரிழந்த பெண்!

Published by
Rebekal

பஞ்சாபில் ஆட்டோக்குள் அமர்ந்திருந்த பெண்ணிடமிருந்து போனை திருடர்கள் பறிக்க முயன்ற போது அதை மீண்டும் பிடுங்க நினைத்த பெண் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

தற்போதைய காலத்தில் தெருவில் பெண்கள் அல்ல ஆண்களே நடந்து செல்வதற்கு சற்று அச்சமாக இருக்கிறது. காரணம் என்னவென்றால் வழிப்பறி கொள்ளை தான். தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருக்க கூடிய பொருட்கள், கைப்பை அல்லது அணிந்திருக்கக் கூடிய தங்க நகைகள் ஆகியவற்றை திருடிவிட்டு செல்லும் கொள்ளையர்கள் பல்வேறு இடங்களிலும் அதிகரித்துவிட்டனர். இதனால் சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. தற்போதும் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் இதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

27 வயது இளம்பெண் ஒருவர் ஆட்டோ ரிக்ஷாவில் அமர்ந்து தனது மொபைலை உபயோகித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த திருடர்கள் அப்பெண்ணின் கையில் இருந்த போனை திருட முயற்சித்துள்ளனர். அப்போது நின்று கொண்டிருந்த ஆட்டோ நகர்ந்ததால் அப்பெண் மொபைலை மீண்டும் பிடுங்க நினைத்த பொழுது ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். போனை திருட முயற்சித்தவர்கள் அப்பெண்ணை தாக்கிய போதும் போராடி அந்த போனை எடுத்து விட வேண்டும் என அப்பெண் கடினமாக இழுத்ததால் ஆட்டோவில் இருந்து வெளியே விழுந்து விட்டார் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தான் பெண் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago