அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை ஏனெனில் அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிளவுபடுத்தும் பயங்கரவாதிகள்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. இவர்களிடம் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவுகளும் எட்டப்படாத நிலையில், குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டெல்லியில் போராட்டம் நடக்கும் பகுதியை சுற்றி இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது குறித்து, ‘இது குறித்து நாம் ஏன் பேசவில்லை’ என டுவிட் செய்திருந்தார்.
இதனையடுத்து இவருக்கு பதில் தெரிவிக்கும் வண்ணமாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டர் பக்கத்தில், ‘அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை ஏனெனில் அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிளவுபடுத்தும் பயங்கரவாதிகள். அமெரிக்காவைப் போல பிளவுபட்ட தேசத்தை சீனா தனது காலனி ஆதிக்கத்துக்குள் கொண்டுவர முயற்சிக்கும். பொறுமையாக இருங்கள் முட்டாளே உங்களைப் போல நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம்.’ என ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…