இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை செய்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சில திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில், இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 1,154,917 பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கொரோனா வைரசால் 28,099 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா காலக்கட்டத்தில் பாஜக அரசு செய்துள்ள சாதனைகள்.
பிப்ரவரி- நமஸ்தே டிரம்ப்,
மார்ச்-மத்திய பிரதேச அரசைக் கவிழ்த்தது.
ஏப்ரல்-மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல்.
மே-அரசின் 6-வது ஆண்டு கொண்டாட்டம்.
ஜூன் – பிகார் மெய்நிகர் பேரணி
ஜூலை-ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி.
இந்தச் சாதனைகளினால் கொரோனா வைரஸ்சுக்கு எதிரான போரில் நாடு ‘தன்னிறைவு பெற்றது’ என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…