கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சத்தீஸ்கர், டெல்லி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவுதலை குறைக்க கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சமூக தனிமைப்படுத்த பெரிய கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்க வேண்டும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். மேலும், இந்த 11 மாநிலங்களில் அதிகம் கொரோனா எதிர்கொள்ளும் முக்கிய ஐந்து மாநிலங்கள் சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் தற்போது புதியாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 7.6 சதவீத எனவும் இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவான 5.5 % விட 1.3 மடங்கு அதிகம் என கூறப்பட்டது. அதே நேரத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 10.2 % அதிகரித்துள்ளது.
மும்பை, நாக்பூர், புனே, நாசிக், தானே, லக்னோ, ராய்ப்பூர், அகமதாபாத் மற்றும் அவுரங்காபாத் போன்ற மாநிலங்கள் தினசரி பாதிக்கும் வரம்பை ஏற்கனவே கடந்துவிட்டன என வர்தன் கூறினார். வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என கூறும் மத்தியில் மகாராஷ்டிராவுக்கு 1,121 வென்டிலேட்டர்கள், 1,700 உ.பி., 1,500 ஜார்கண்டிற்கு, 1,600 குஜராத்துக்கு, 152 மத்திய பிரதேசம் மற்றும் 230 சத்தீஸ்கருக்கு வழங்கப்படும்.தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இருக்காது என்றும் அவர் கூறினார்.
இதுவரை தடுப்பூசிகளின் மொத்த நுகர்வு, வீணானது உள்ளிட்டவை, மையம் வழங்கிய 14.15 கோடி அளவுகளுக்கு எதிராக சுமார் 12.57 கோடியாக உள்ளது. இதுவரை மாநிலங்களுக்கு 14.15 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப் பட்டுள்ளன. இதில் 12.57 கோடி தடுப்பூசிகள் உபயோகிக்கப்பட்டுள்ளன. சுமார் 1.58 கோடி டோஸ் இன்னும் மாநிலங்களில் உள்ளன. மேலும் 1. 16 லட்சம் டோஸ் அடுத்த வாரத்திற்குள் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…