பல்பு வாங்கிய பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்… பொய்களை கூறுவது வாடிக்கை என்று இந்தியா காட்டம்…

Published by
Kaliraj

பங்காளி நாடான பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு நடத்த இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக, பாகிஸ்தான் கூறியுள்ளதில் எந்த உண்மையும் இல்லை’ என, இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப், சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில், காஷ்மீர் உட்பட, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவர் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், ‘அமைதி பேச்சு நடத்த ஆர்வமாக இருப்பதாக இந்தியா செய்தி அனுப்பியுள்ளது’ என, குறிப்பிட்டார்.

இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது,  பாகிஸ்தான் அதிகாரி கூறியுள்ளதுபோல், அமைதி பேச்சு நடந்த, இந்தியா எந்த அழைப்பும் விடுக்க வில்லை; அவர் கூறியதில் எந்த உண்மையும் இல்லை. நம் உள்நாட்டு விவகாரம் தொடர்பாக அவர் பேசியுள்ளதற்கு, இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். பாகிஸ்தானில் உள்ள அரசு, உள்நாட்டு பிரச்னைகளால் திண்டாடுகிறது. அதை மறைக்கவும், சர்வதேச நாடுகளை திசை திருப்பவும், இதுபோன்ற பொய்களை கூறுவது வாடிக்கை என்று அவர் கூறினார்.

Recent Posts

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

34 minutes ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

47 minutes ago

ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…

1 hour ago

2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…

2 hours ago

அடுத்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா எங்கு? எப்போது? வெளியானது அறிவிப்பு.!

லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…

2 hours ago

பண மோசடி வழக்கு: நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்.!

செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…

3 hours ago