ஜூலை மத்தியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசித் செலுத்தும் அளவுக்கு தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சில மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், ஐசிஎம்ஆர் இயக்குனர் பல்ராம் பார்கவா இதுகுறித்துக் கூறுகையில், பொது முடக்கத்தை படிப்படியாக தளர்த்துவது பெரும் பரவலுக்கு வழி வகுக்காது. இருந்தாலும் தடுப்பூசி செலுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பதை உறுதிசெய்யவேண்டும். தடுப்பூசி செலுத்தும் விகிதம் 70 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.
மேலும், தடுப்பூசிக்கு எவ்வித குறையும் இல்லை. ஜூலை மத்தியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசித் செலுத்தும் அளவுக்கு தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும். டிசம்பருக்குள் ஒட்டுமொத்த மக்களும் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…