கொரோனா ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை – முன்னாள் ஐசிஎம்ஆர் நிபுணர்

Default Image

கொரோனா செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை – ஐசிஎம்ஆர் நிபுணர் விளக்கம் !

உலகம் முழுவதும் கொரோனா காட்டுத்தீ போல் பரவி லட்சக்கணக்கில் உயிர்களை பலி வாங்கியுள்ளது, இது முதன் முதலான சீனாவில் வுஹான் என்ற நகரத்திலிரந்து பரவியதாக கூறப்பட்டு வந்தது.

இருப்பினும் கொரோனா இயற்கையாக உருவாக்கப்பட்டது இல்லை என்றும் அது சீனா வுஹான் நகரத்தில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்துதான் செயற்கையாக கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தி உலகெங்கும் பரவி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக முன்னால் ஐசிஎம்ஆர் நிபுணர் டாக்டர் ராமன் ஆர் கங்கேத்கர் கூறுகையில், கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் செயற்கையாகவோ அல்லது விலங்குகள் வழியாகவோ பரவியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் கொரோனாவின் தோற்றம் பற்றி இறுதியான முடிவுக்கு வர கூடுதல் சான்றுகள் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெய்லி மெயில் சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஆய்வில், சீனர்கள் வுஹான் ஆய்வகத்தில் கொரோனா வைரஸை உருவாக்கினர் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Black paint DMK
sajjan kumar
Match abandoned due to rain
Wasim Akram
GK Mani home wedding ceremony - Jason sanjay - Vijay sethupathi - Tamilnadu CM MK Stalin
tvk vijay ntk seeman