இதுக்குமேல் அவகாசம் கிடையாது., வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா காலத்தில் தவணை செலுத்தாதோரின் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா மற்றும் ஊரடங்கில் பொருளாதார நெருக்கடியாலும், நிதி சுமையாலும் தனிநபர்கள் நிறுவனங்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என்ற வழக்கு விசாரணையின்போது, வட்டியை முழுமையாக தள்ளுபடி உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா கால வங்கிக்கடன் தவணை சலுகையை 6 மாதத்துக்கு மேல் நீடிக்க முடியாது என்று கூறிய, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. ஊரடங்கில் தவணையை திருப்பி செலுத்தாத நபர்களுக்கு வங்கிகள் விதித்த வட்டிக்கு வட்டி தள்ளுபடியானது என்றும் கொரோனா காலத்தில் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், கொரோனா காலகட்டத்தில் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட்டிருந்தால் திருப்பி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கி கொள்கையில் தடையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

19 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago