தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை-கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார்

Default Image

இன்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை  கூட்டத்தில்,ஆணையத்தின் தலைவர் மசூத் உசென் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார்.அதில் தமிழகத்துக்கு ஜூன் மாதத்திற்குரிய 9.2 டி.எம்.சி. காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்து கலந்தாலோசித்து விரைவில் முடிவெடுப்போம். கர்நாடகாவில் போதிய நீர் இருக்கும் பட்சத்தில், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்