கடந்த மாதம் யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை தான் கொரோனாவை குணப்படுத்தும் எனவும், தடுப்பூசி போட வேண்டும் என்று அவசியமில்லை எனவும் பாபா ராம்தேவ் சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தார். மேலும் கொரோனா மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் செயல் திறன் குறித்த பல கேள்விகளை எழுப்பியிருந்தார். இதனையடுத்து இந்திய மருத்துவ சங்கம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், மத்திய சுகாதார அமைச்சகமும் பாபா ராம்தேவ் தனது கருத்தை வாபஸ் வாங்குமாறு ராம்தேவுக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில், பாபா ராம்தேவ் தனது அலோபதி மருத்துவ முறைதான் சிறந்தது என்ற கருத்திலிருந்து விலகா விட்டாலும், தடுப்பூசி குறித்த தனது நிலைப்பாட்டிலிருந்து தற்போது விலகி விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பாக பேசிய அவர் எங்களுக்கு எந்த ஒரு அமைப்பினருடன் பகை இருக்க முடியாது எனவும், நல்ல மருத்துவர்கள் அனைவருமே இந்த பூமிக்கு கடவுள் அனுப்பிய தூதர், இந்த கிரகத்திற்கு கொடுக்கப்பட்ட பரிசு என தெரிவித்துள்ளார்.
தேவையற்ற மருந்துகளை உபயோகிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அலோபதி தான் சிறந்தது என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்துள்ள அவர், உயிருக்கு ஆபத்தான நோய்கள் மற்றும் குணப்படுத்த முடியாத கோளாறுகளையும் பண்டைய நடைமுறைகள் மூலம் குணப்படுத்தலாம் என யோகா மற்றும் ஆயுர்வேதத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…