மொத்தம் 534.78 லட்சம் டன் அரிசியும், கோதுமையும் இருக்கிறது – மத்திய அமைச்சர் பஸ்வான்.!

Published by
பாலா கலியமூர்த்தி

9 மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் அரசின் கையிருப்பில் உள்ளன என்று மத்திய அமைச்சர் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கை மத்திய அரசு மேலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய அமைச்சர் பஸ்வான் செய்தியர்களிடம் பேசியுள்ளார். அப்போது, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வருகிறார்கள் என்றும் நாடு முழுவதும் உணவு தானியங்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதிலும், வினியோகம் செய்வதிலும் எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளார். இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த பணி சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு உரிய நேரத்தில் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், 9 மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் அரசின் கையிருப்பில் உள்ளன. அரசின் சேமிப்பு கிடங்குகளில் 299.45 லட்சம் டன் அரிசி, 235.33 லட்சம் டன் கோதுமை என மொத்தம் 534.78 லட்சம் டன் அரிசியும், கோதுமையும் இருக்கின்றது என கூறியுள்ளார். இப்போது அறுவடை காலம் என்பதால், புதிதாக அரசின் தொகுப்புக்கு வரும் உணவு தானியங்களையும் சேர்த்து நம்மிடம் கையிருப்புக்கு வரும் உணவு தானியங்கள் சுமார் 2 ஆண்டுகளுக்கு போதுமானதாக இருக்கும். மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் மத்திய அரசு மிகவும் கவனமாக உள்ளது என்று தெரிவித்தார்.

இதையடுத்து பொது விநியோகம் திட்டத்தின் கீழ் ஒரு மாதத்துக்கு 60 லட்சம் டன் உணவு தானியம் மக்களுக்கு வழங்கப்படுகிறது. மாதம் 35 கிலோ உணவு தானியம் பெறும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள திட்ட பயனாளிகளுக்கு, அவர்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. கட்டுப்பாடுகளை நீக்கி, பொது வினியோக திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 3 மாதங்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு இருக்கிறது. ஊரடங்கு காலத்தில் யாரும் பட்டினியால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என குறிப்பிட்டார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

40 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

43 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 hours ago