“வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றது.. ஆனால் கடைபிடிக்கதான் ஆளில்லை”- உச்சநீதிமன்றம் வேதனை!

கொரோனா பரவலை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றது, ஆனால் அதனை கடைபிடிக்கதான் ஆளில்லை என உச்சநீதிமன்றம் வேதனை அடைந்துள்ளது.
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 பேர் உயிரிழந்து, மேலும் 6 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து, வழக்கு விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை, நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி ஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது பேசிய நீதிபதிகள், கொரோனா காலத்தில் ஊர்வலங்கள் நடக்கின்றது, 80 சதவீத மக்கள் முகக்கவசம் அணிவதில்லை எனவும், மற்றவர்களின் தாடைகளில் தான் முகக்கவசம் தொங்குகிறதாக நீதிபதி உரையாற்றினார். அதுமட்டுமின்றி, வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றது. ஆனால் அதனை கடைபிடிக்கதான் ஆளில்லை என வேதனை தெரிவித்த நீதிபதிகள், தீ விபத்து குறித்து குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுபோன்ற விபத்துகளை தடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025