டெல்லியில் 18 வயதுக்கு மேல் 1.5 கோடி மக்கள் உள்ளனர்…! எங்களுக்கு 3 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவை…! – டெல்லி முதல்வர்

Published by
லீனா

அடுத்த மூன்று மாதங்களில் டெல்லி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட கூடிய வகையில் மாதத்திற்கு 85 லட்சம் வழங்க வேண்டும்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி தேவையான தடுப்பூசி அளவை கிடைக்கப் பெற்றால் 2.6 கோடி தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றால் மூன்று மாதங்களுக்குள் டெல்லி அரசால் தடுப்பூசி போட முடியும் என தெரிவித்துள்ளார். டெல்லியில் 18 வயதிற்கும் மேல் சுமார் 1.5 கோடி மக்கள் உள்ளனர். அந்த கணக்கீட்டின்படி, இந்த 1.5 கோடி மக்களுக்கும் தடுப்பூசி போட டெல்லிக்கு இன்னும்  3 கோடிகொரோனா தடுப்பூசிகள் தேவை.

ஏற்கனவே 40 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் டெல்லி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட கூடிய வகையில் மாதத்திற்கு 85 லட்சம் வழங்க வேண்டும் என்றும், தடுப்பூசி மட்டுமே இந்தியாவை கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கக்கூடிய ஆயுதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காணொலி காட்சி மூலம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், டெல்லியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து இளைஞர்கள் உற்சாகமாகத் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தற்போது டெல்லியில் உள்ள 100 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் மையங்கள் 250 முதல் 300 ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், டெல்லியில் ஒரு நாளைக்கு,ஒரு லட்சம் தடுப்பூசி  வழங்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி பெற பரிதாபாத், குர்கான், நொய்டாவில் இருந்து பலர் இங்கு வருகிறார்கள். டெல்லியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பாராட்டி செல்கின்றனர்.

எங்களுக்கு 40 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இன்னும் எங்களுக்கு 2.60 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. டெல்லியில் போதிய தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. தேவையான அளவு தடுப்பூசிகள் கிடைத்தால், டெல்லி அரசு மூன்று மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

டெல்லி நிலவரம்., எச்சரிக்கை! I.N.D.I.A தலைவர்கள் ஈகோ-வை விட்டுவிட வேண்டும்! திருமா அட்வைஸ்! 

டெல்லி நிலவரம்., எச்சரிக்கை! I.N.D.I.A தலைவர்கள் ஈகோ-வை விட்டுவிட வேண்டும்! திருமா அட்வைஸ்!

மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…

15 minutes ago

ஈரோடு கிழக்கில் 3வது இடம் பிடித்த ‘நோட்டா’! சுற்று முடிவுகள் தெரியுமா?

ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…

52 minutes ago

டெல்லி தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் ‘அந்த’ ஒரு தொகுதி எது தெரியுமா?

டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…

2 hours ago

கிராமுக்கு ரூ.8000-ஐ நெருங்கிய தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…

2 hours ago

ரசிகர்களுக்கு செல்ஃபி பாயிண்ட்… தோனியின் வீட்டில் ‘7’ ஜெர்சி எண், ஹெலிகாப்டர் ஷாட் லோகோ.!

ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…

2 hours ago

ஈரோடு கிழக்கு : திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை.., 10 ஆயிரத்தை நெருங்கும் வித்தியாசம்!

ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி…

2 hours ago