ஜார்க்கண்ட் துணை கலெக்டர் சஞ்சய் குமார் தனது ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
சுற்றுச்சூழலை கவனித்துக்கொள்வது நம் கையில் தான் உள்ளது. தற்போது, நகரமயமாக்கல் காரணமாக பல மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. மரங்களை வெட்டாமல் மரங்களை வளர்க்க வேண்டும் என அரசு மற்றும் தன்னார்வலர்கள், பிரபலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை ஜார்க்கண்ட் துணை கலெக்டர் சஞ்சய் குமார் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஒரு புகைப்படம் ஆயிரம் சொற்களுக்கு மேல் என தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில், சில இளைஞர்கள் ஒரு மரத்தை தோளில் சுமந்து கொண்டு வேறொரு இடத்திற்கு கொண்டு செல்கின்றனர். சில நேரங்களில் மரங்கள் இரக்கமின்றி வெட்டப்படுகிறது. இருப்பினும், இந்த இளைஞர்கள் தங்கள் தோள்களில் மரத்தை சுமந்துகொண்டு செல்வதை பார்க்கும்போது, மரத்தை வெட்ட வேண்டிய அவசியமில்லை எனவும், ஒரு மரத்தை வெட்டுவதற்கு பதிலாக அதை வேறு இடத்திற்கு எடுத்துச் சென்று மண்ணில் நடலாம் என்பதை இந்த புகைப்படம் சொல்கிறது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த இளைஞர்களை பலர் பாராட்டியுள்ளனர். இந்த புகைப்படத்திற்கு 5,000 க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…