சீருடையில் இருந்த பெண் கான்ஸ்டபிளை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர் ..!

Published by
murugan

சீருடையில் இருந்த ஒரு பெண் கான்ஸ்டபிள் முகத்தில் இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பெண் போலீஸார் ஒருவர் சீருடை அணிந்து இளஞ்சிவப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, பிரபாத் குமார் என்பவர் பெண் கான்ஸ்டபிளை பார்த்து அவதூறான கருத்துகளை தெரிவித்தார். இதனால் கோபமடைந்த பெண் கான்ஸ்டபிள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பிரபாத் குமார் இரும்பு கம்பியால் பெண் கான்ஸ்டபிளை தாக்கினார்.

பெண் கான்ஸ்டபிள் முகத்தில் தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றபோது அங்கு இருந்தவர்கள் பிரபாத் குமாரை துரத்திச் சென்று பிடித்தனர். அதிக இரத்தப்போக்கு அதிகம் காரணமாக பெண் கான்ஸ்டபிள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட பிரபாத் குமார் ஒரு வழக்கறிஞரின் மகன் என்று போலீசார் தெரிவித்தனர்.பிரபாத் குமார் மீது கொலை முயற்சி, கிண்டல் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்படுவதாக அதிகாரி ஒருவர் கூறினார். பெண்கள்/பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்க இந்த இளஞ்சிவப்பு பிரிவு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan
Tags: -Lucknow

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

2 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

14 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

26 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

32 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

47 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago