உலக அமைதி வேண்டி ராஜஸ்தானை சேர்ந்த சுபியா (33 )இவர் காஷ்மீரிலிருந்து 4,035 கிலோ மீட்டர் தூரத்தை 90 நாள்களில் ஓடி கடந்து நேற்று முன்தினம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தை வந்து அடைந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சார்ந்த சுபியா இவர் தடகள வீராங்கனை.இவர் இந்தியா விமான துறையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். திருமணமாகாத இவர் உலக அமைதி , மனித நேயம் ஆகியவற்றை வலியுறுத்தி கின்னஸ் சாதனை செய்யும் முயற்சியாகவும் ,காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை தொடர்ஓட்டப் பயணம் மேற்கொண்டார்.
கடந்த ஏப்ரல் 21-ம் தேதி காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து தேசிய கொடியை ஏந்தியபடி ஓட்டத்தில் தொடங்கி தினமும் 50 கிலோ மீட்டர் வீதம் 14 மாநிலங்களை கடந்து 100 நாள்களில் 4,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து கன்னியாகுமரியை கடக்கலாம் என சுபியா திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் அதற்கு முன்னதாகவே 90 நாள்களில் ஆயிரத்து 4,035 கிலோமீட்டர் கடந்து நேற்று முன்தினம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தை வந்து அடைந்தார்.சுபியாவின் ஓட்டப் பயணத்துக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய தடகள சங்கத்தினர் அந்தந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் உதவியுடன் செய்திருந்தனர்.
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…