பணத்துக்காக விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கடத்திவிட்டு, எரித்துக்கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் மகபூப் என்னும் நகரில் கிருஷ்ணா காலனி எனும் பகுதியை சேர்ந்த ரஞ்சித் – வசந்தா ஆகியோரின் மகன் தான் ஒன்பது வயதுடைய தீட்சித். கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியில் விளையாடிக்கொண்டிருந்த தீட்சித் இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என்பதால் பதற்றமடைந்து குழந்தையை தேட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் அன்று இரவே அச்சிறுவனின் குடும்பத்தினர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் தீட்சித்தை தான் கடத்தி வைத்திருப்பதாகவும் நாற்பத்தி ஐந்து லட்சத்தை கொடுத்துவிட்டு அவனை மீட்டு செல்லும்படி கூறி இணைப்பை துண்டித்துள்ளார் அந்த மர்ம நபர். இது குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அதன்பின் கடத்தியவரை பிடிப்பதற்காக போலீஸ் அறிவுரைப்படி நேற்று முன்தினம் மகபூப்நகர் கூட்டு ரோட்டில் பணத்துடன் ரஞ்சித் சில மணி நேரம் வரை காத்திருந்து உள்ளார். ஆனால் அங்கு யாரும் வரவில்லை ஆனால், நேற்று காலை ஊருக்கு வெளியே தீட்சித்தின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது இந்நிலையில் இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ரஞ்சித் அவர்களின் குடும்பத்திற்கு நன்கு பழக்கமான 22 வயதுடைய சாகர் எனும் இளைஞர் தான் என அறிந்து, அதன்பின் போலீசார் அவரை பிடித்து விசாரித்த பொழுது பணத்துக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தியதாகவும், ஆனால் சிறுவனாக இருந்தாலும் தீட்சித் தன்னை அடையாளம் கண்டுகொண்டதால் வெளியே சொல்லி விடுவான் என்ற அச்சத்தில் அவனை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…