Categories: இந்தியா

ஃபாலோ செய்த இளைஞன்.. செருப்பால் அடித்து விரட்டிய கல்லூரி மாணவி.! வைரலாகும் வீடியோ…

Published by
பால முருகன்

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் விடுதியில் இருந்து பெண் ஒருவர் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து சென்று நபர் ஒருவர் துன்புறுத்தியுள்ளார். மாணவியை பின்னால் இருந்து அணுகி அநாகரீகமாக அந்த நபர் நடந்து கொண்டார்.

தனது பாதுகாப்பிற்கு பயந்து, மாணவி தனது குரலை உயர்த்தி, அருகிலுள்ள குடியிருப்பாளர்களை உதவிக்காக அழுதுகொண்டே அழைத்தார். அவர் அழுத சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து துன்புறுத்திய அந்த நபரை  தப்பிக்கவிடாமல் பிடித்தனர்.

பிறகு, அந்த மாணவி மிகவும் கோபத்துடன் காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி அழுதுகொண்டே பின்தொடர்ந்து  துன்புறுத்திய அந்த நபரின் கன்னத்தில் ப்ளார்..ப்ளார்..என பல முறை அறைந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து  உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த அதிகாரிகளிடம் குற்றவாளியை பிடித்து அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர்.பின்,  குந்தாப்பூர் காவல் நிலையத்தில் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

26 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago