வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு ஆசீட் அடித்த இளைஞர் – காரணம் கேட்டு அதிர்ந்த காவல்துறையினர்!

Published by
Rebekal

தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் இளம்பெண் மீது ஆசிட் அடித்த இளைஞர் உத்திரபிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய காலத்தில் இளம்பெண்கள் இளைஞர்களுடன் நட்பாக பழகுவதும் காதல் வயப்பட்டு பேசுவதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால் அந்த உறவு முறிந்து விடும் பட்சத்தில் சில ஆண்கள் கண்மூடித்தனமான கோபத்தில் தவறான முடிவுகளையும் எடுத்து விடுகின்றனர். சிலர் தங்களை தாங்களே மாய்த்து தற்கொலை செய்து கொள்கின்றனர். பலர் விலகிச் சென்ற பெண்களை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் கொலை வரை சென்று விடுகின்றனர். அதுபோல உத்திரபிரதேச மாநிலத்தில் ஹப்பூர் எனும் பகுதியில் நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் திடீரென வீட்டுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் அங்கு இருந்த இளம்பெண் மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் அந்தப் பெண்மிகவும் காயமடைந்த நிலையில் மீரட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து அந்த பெண்ணின் தந்தை இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இப்பிரச்சனை குறித்து விசாரித்ததில், இளம்பெண்ணுக்கு ஆசிட் அடித்த இளைஞனும் அந்தப் பெண்ணும் சிறிது காலம் நட்பாக பழகி வந்ததாகவும் அதன் பின்பு அந்தப் பெண் அந்த இளைஞனுடன் பேசுவதை நிறுத்தி விட்டதால் கோபத்தில் அந்த இளைஞர் பெண் மீது ஆசிட் வீசியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. தற்பொழுது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பேசவில்லை எனும் ஒரு காரணத்திற்காக பெண் மீது இளைஞன் ஆசிட் அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

எலான் மஸ்க் உடன் பேசினேன்.., பிரதமர் மோடி பகிர்ந்த புதிய தகவல்! 

எலான் மஸ்க் உடன் பேசினேன்.., பிரதமர் மோடி பகிர்ந்த புதிய தகவல்!

டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…

50 minutes ago

சென்னை மக்களுக்கு குளுகுளு செய்தி! முதன்முதலாக ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடக்கம்….

சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…

1 hour ago

குறுக்கே வந்த கௌசிக்(மழை)., குறைந்த ஓவர்! RCB-ஐ அசால்ட் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…

2 hours ago

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

10 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

13 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

14 hours ago