உ.பி-யில் நடந்த கொடூரம், கொரோனா அறிகுறி இருப்பதாக நினைத்து பேருந்திலிருத்து வீசி எறியப்பட்ட பெண்.!

Published by
Ragi

கொரோனா அறிகுறி இருப்பதாக நினைத்து இளம்பெண் ஒருவரை பேருந்திலிருத்து தூக்கி எறிந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 15-ம் தேதி, 19 வயதுடைய அன்ஷிகா யாதவ் மற்றும் அவரது தாயும் டெல்லியில் இருந்து  ஷிகோகாபாத் நகருக்கு   பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இதனிடையே அன்ஷிகாவிற்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக கருதிய சக பயணிகள், பேருந்து ஒட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தகவலை தெரிவித்தனர்.

உடனடியாக ஒட்டுநர் மற்றும் நடத்துநர் யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தி விட்டு, அந்த பெண்ணை வெளியே தூக்கி வீசியுள்ளனர். தூக்கி வீசியதில் படுகாயமடைந்த அந்த பெண், 30 நிமிடங்களில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது இந்த தகவலை அறிந்த டெல்லி மகளிர் ஆணையர் ஸ்வாதி மாலிவால், உத்திரப் பிரதேச போலீசில் புகார் அளித்ததோடு, ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாருக்கு இதுவரை வழக்குப்பதிவு ஏன்..? செய்யவில்லை என்பது குறித்து விளக்கம் கேட்டும், இது போன்ற கொடூரமான செயலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரை மறுத்து விட்டு இயற்கையான மரணம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து பிரேத பரிசோதனையில் பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறிய மதுரா எஸ். எஸ். பி கவுரவ் குரோவர், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு எஸ். பி. ஷிரிஷ் சந்திராவிடம் உத்தரவிட்ட பின்னரே, இந்த உ . பி-யில் நடந்த கொடூரமான சம்பவம் வெளி வந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago