கணவரின் அதீத அன்பால் மூச்சு திணறி விவகாரத்து கேட்ட மனைவி.!

Published by
Ragi

கணவர் தன்னிடம் சண்டை போடாமல் அளவுக்கு அதிகமான அன்பை தனக்கு காட்டுவதாக கூறி மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள சம்பத் மாவட்டத்தில் உள்ள பெண் ஒருவர் கணவர் தன்னிடம் சண்டை போடாமல் அளவுக்கு அதிகமான அன்பை வெளிப்படுத்துவதால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரி ஷரியா நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் எனக்கு திருமணமாகி 18 மாதங்களாகியதாகவும், ஆனால் தனது கணவர் என்னிடம் ஒரு நாள் சண்டை போட்டதில்லை என்றும், அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் தனக்கு சமையல், வீட்டு வேலைகள் உள்ளிட்ட அனைத்திலும் உதவுகிறார், அளவுக்கு அதிகமான அன்பை காட்டுகிறார். அது தனக்கு பொறுத்து கொள்ள முடியவில்லை என்றும், தான் தவறு செய்தால் கூட தன்னை அவர் மன்னிப்பதாகவும், இந்த அன்பால் தான் மூச்சு திணறி வருவதாகவும், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு ஒத்து போகும் நபர் தனக்கு வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

பெண்ணின் காரணத்தை கேட்ட நீதிபதி விவகாரத்திற்கான பெண்ணின் காரணம் அற்பமாக உள்ளதாக கூறி நிராகரித்து விட்டார். மேலும் உள்ளூர் பஞ்சாயத்திடம் இந்த மனு கொண்டு செல்லப்பட்டு நிராகரித்துள்ளனர். இதுகுறித்து பெண்ணின் கணவர் கூறுகையில், அவள் ஒரு தவறும் செய்ததாக தான் நினைக்கவில்லை, எப்போதும் தான் சரியான கணவராக இருக்க வேண்டுமென்றே விரும்புகிறேன் என்றும், தனது மனைவியின் மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு கணவரும் ஷரியா நீதிமன்றத்திடம் கேட்க, அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

Published by
Ragi

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago