கணவரின் அதீத அன்பால் மூச்சு திணறி விவகாரத்து கேட்ட மனைவி.!

Default Image

கணவர் தன்னிடம் சண்டை போடாமல் அளவுக்கு அதிகமான அன்பை தனக்கு காட்டுவதாக கூறி மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள சம்பத் மாவட்டத்தில் உள்ள பெண் ஒருவர் கணவர் தன்னிடம் சண்டை போடாமல் அளவுக்கு அதிகமான அன்பை வெளிப்படுத்துவதால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரி ஷரியா நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் எனக்கு திருமணமாகி 18 மாதங்களாகியதாகவும், ஆனால் தனது கணவர் என்னிடம் ஒரு நாள் சண்டை போட்டதில்லை என்றும், அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் தனக்கு சமையல், வீட்டு வேலைகள் உள்ளிட்ட அனைத்திலும் உதவுகிறார், அளவுக்கு அதிகமான அன்பை காட்டுகிறார். அது தனக்கு பொறுத்து கொள்ள முடியவில்லை என்றும், தான் தவறு செய்தால் கூட தன்னை அவர் மன்னிப்பதாகவும், இந்த அன்பால் தான் மூச்சு திணறி வருவதாகவும், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு ஒத்து போகும் நபர் தனக்கு வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

பெண்ணின் காரணத்தை கேட்ட நீதிபதி விவகாரத்திற்கான பெண்ணின் காரணம் அற்பமாக உள்ளதாக கூறி நிராகரித்து விட்டார். மேலும் உள்ளூர் பஞ்சாயத்திடம் இந்த மனு கொண்டு செல்லப்பட்டு நிராகரித்துள்ளனர். இதுகுறித்து பெண்ணின் கணவர் கூறுகையில், அவள் ஒரு தவறும் செய்ததாக தான் நினைக்கவில்லை, எப்போதும் தான் சரியான கணவராக இருக்க வேண்டுமென்றே விரும்புகிறேன் என்றும், தனது மனைவியின் மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு கணவரும் ஷரியா நீதிமன்றத்திடம் கேட்க, அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்