கணவரின் பேச்சை மறுத்து தாயை காண சென்ற மனைவி.! ஆத்திரத்தில் மாமியாரை கொலை செய்த மருமகன்.!

Published by
Ragi

கணவரின் பேச்சை மறுத்து அவரது தாயை மனைவி காண சென்றதால் ஆத்திரமடைந்த கணவன் மாமியாரை கொலை செய்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள நவி மும்பையில் 28 வயதான நபரின் மனைவி அவரது தாயின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதால் கோவமடைந்த கணவன் மாமியாரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்களன்று கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் 45வயதான அவரது மனைவியான ரேகா சர்மா அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

உடனடியாக விரைந்து வந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் இறந்த ரேகாவின் வீட்டிற்கு ரெயின்கோட் இட்ட ஒருவர் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து ரேகாவின் போன் அழைப்பு விவரங்களையும், குடும்ப உறுப்பினர்களுடனும் நடத்திய விசாரணையில் மருமகனான பிரபுல் சியாலி என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. அதனையடுத்து அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், அவரது கர்ப்பிணி மனைவியை அவரது தாயான ரேகாவின் வீட்டிற்கு செல்ல கூடாது என்று விலக்கியதாகவும், ஆனால் அதனை அவரது மனைவி மறுத்து விட்டு தாய் வீட்டுக்கு செல்வதாகவும், அதனால் கோவமடைந்த பிரபுல் ரேகாவை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.

Recent Posts

ரொம்ப பிடிச்ச மைதானம்..அதான் காந்தாராவாக மாறிட்டேன்! கே.எல்.ராகுல் ஸ்பீச்!

ரொம்ப பிடிச்ச மைதானம்..அதான் காந்தாராவாக மாறிட்டேன்! கே.எல்.ராகுல் ஸ்பீச்!

பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…

34 minutes ago

தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!

சென்னை :  தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…

2 hours ago

பாஜக கூட்டத்தில் அடுத்தடுத்த டிவிஸ்ட்., பேனர் மாற்றம்! நயினார் நாகேந்திரன் புகைப்படம்!

சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…

2 hours ago

”டாக்சிக் மக்களே… இது தான் பெயரில்லா கோழைத்தனம்” – த்ரிஷாவின் காட்டமான பதிவு.!

சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…

3 hours ago

பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை!

சென்னை :  திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு உடலுறவு குறித்து மறைமுகமாக…

3 hours ago

“நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.,” அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!

சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…

5 hours ago