“போராடியதற்கு துப்பாக்கிச்சூடு” “மீண்டும் ஒரு தமிழகம்” பள்ளி மாணவர்கள் மீது வெறியாட்டம் ஆடிய மேற்கு வங்க அரசு..!!

Published by
Dinasuvadu desk

பள்ளியில் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கொடூரமான முறையில் சுட்டு படுகொலை செய்திருக்கிறது மேற்குவங்க மம்தா அரசு. மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்து எழுந்துள்ளது.

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி காட்டாட்சி நடத்தி வருகிறார். ஜனநாயகப்பூர்வமான போராட்டங்களை சற்றும் சகித்துக் கொள்ளமுடியாத மம்தா பானர்ஜி, பள்ளி மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை. மேற்குவங்கத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ளது இஸ்லாம்பூர். இங்கு உள்ள உயர்நிலைப்பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் நியமனம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வியாழனன்று, அரசு நிர்வாகம் சற்றும் கண்டுகொள்ளாத நிலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Image result for போராட்டம்அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக மம்தா அரசு காவல்துறையை ஏவி கொடூரமான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. சின்னஞ்சிறு பள்ளி மாணவர்கள் என்றும் பாராமல், கண்மூடித்தனமாக அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ராஜேஷ் சர்க்கார் என்ற மாணவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தபஸ் பர்மன் என்ற முன்னாள் மாணவர் குண்டு பாய்ந்த நிலையில், வெள்ளியன்று காலை மரணமடைந்தார். ஏராளமான மாணவர்களுக்கு கடுமையான குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த கொடிய தாக்குதலை கண்டித்து வெள்ளியன்று மேற்கு வங்க மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் கொந்தளிப்பு மிக்க போராட்டத்தை நடத்தினர். போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.பள்ளி மாணவர்கள் மீது நடந்த இந்த துப்பாக்கிச்சூடு மேற்குவங்க மக்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

DINASUVADU

Published by
Dinasuvadu desk

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago