உ.பி:போலீஸ்காரர் ஒருவர் கூப்பிய கைகளுடன் நின்ற ஒரு முதியவரை உதைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவதையடுத்து,அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.கே. விஜ் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் போலீஸ்காரர் ஒருவர் கூப்பிய கைகளுடன் நின்ற ஒரு முதியவரை உதைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.அந்த வீடியோவில்,முதியவர் ஒருவர் கையெடுத்து கும்பிட்டு பேசுவதைக் காணலாம், ஆனால்,அவரை உ.பி.காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உதைக்கிறார்.
மேலும்,முதியவரை ‘மனம் குன்றியவர்’ என வர்ணித்த காவல்துறையினர், ஜனவரி 29 ஆம் திகதி இடம்பெற்ற ஒரு குற்றச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.எனினும்,முதியவரை அவர் அறைந்ததற்கான உண்மையான காரணம் குறித்த முறையான தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில்,முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.கே. விஜ் என்பவர்,இந்த வீடியோவைப் பகிரும்போது முதியவரை உதைத்த போலீஸ்காரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும்,சில காவல்துறை சீர்திருத்தங்களுக்கு பணம் தேவையில்லை.மாறாக,முறையான பயிற்சி மற்றும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளால் மட்டுமே முன்னேற்றத்தை கொண்டு வர முடியும்” என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து,இந்த விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், உத்தரபிரதேச காவல்துறை தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…