வெளிநாடுளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் மிஷன் மூலம் 17 நாடுகளுக்கு சுமார் 170 விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது, இதனால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் அச்சத்தில் உள்ளார்கள், மேலும் சில மக்கள் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரமுடியாமல் சிக்கி தவித்து வருகிறார்கள்.
மேலும் இந்நிலையில் இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்திய மக்களை மீட்பதை கருத்தில் கொண்டுவந்தே பாரத் மிஷன் மூலம் கடந்த மே மாதம் முதல் மூன்று கட்டங்களாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.மேலும் இதனால் 50,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடந்த மே மாதம் முதல் தாயகம் திரும்பியுள்ளார்கள்.
இந்நிலையில் மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியது, 17 நாடுகளில் 4 ஆவது கட்டமாக சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர வருகின்ற ஜூலை மாதம் 3 ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை 170 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 26 விமானங்கள் சவுதி அரேபியாவிற்கும், 38 விமானங்கள் இங்கிலாந்திற்கும், 32 விமானங்கள் அமெரிக்காவிற்கும்,இயக்கப்படவுள்ளது.
அந்த 17 நாடுகள் பங்களாதேஷ், மற்றும் சவுதி அரேபியா, இங்கிலாந்து, கென்யா, இலங்கை, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, மியான்மர், அமெரிக்கா, உக்ரைன் மற்றும் வியட்நாம், ஜப்பான், போன்ற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் பயன்பெருவார்கள் என்றும் மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியுள்ளது.
நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப்…
சென்னை : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…