கர்நாடகாவில் தலித் பெண் தண்ணீர் குடித்த தண்ணீர் தொட்டியை கோமியத்தால் கழுவிய உயர்சாதியினர்
இன்று தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் நாளுக்கு நாள் சாதி, மதவெறி மோதல்கள் ஏதோ ஒரு மூலையில் கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் மைசூரில் தலிப் பெண்ணொருவர் சாதிய ரீதியாக அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நவம்பர் 18ஆம் தேதி, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் ஒருவர், உயர் சாதியினர் என்று அழைக்கப்படும் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்துள்ளார்.
இதனை பார்த்த ஒருவர் தொட்டியில் தண்ணீர் குடித்ததற்காக அந்த பெண்ணை திட்டியுள்ளார். இதனால் அப்பெண் அவ்விடத்தில் இருந்து வேகமாக சென்று விட்டார். பின்னர் அப்பெண், தண்ணீர் அருந்திய தொட்டியில் இருந்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு அந்த தொட்டியை கோமியத்தால் கழுவி உள்ளனர்.
இதனை எடுத்து, பாதிக்கப்பட்ட அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைகள் வலுத்து வந்தது. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு சாம்ராஜ்நகர் தாசில்தார் பசவராஜ் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…