இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா அளித்து வரும் பிரச்னையில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியா- சீனா இடையே நீடித்து வரும் பதற்றத்தில் அமெரிக்காவின் நிலைபாடு என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வெள்ளை மாளிகை அதிகாரி, இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கான முழுமையான ஆதரவை டிரம்ப் நிர்வாகம் வழங்கும். எல்லை பிரச்னை மட்டுமின்றி இந்தியாவுடன் அனைத்து விஷயங்களிலும் கைகோர்த்து நட்புடன் செயல்பட அமெரிக்கா விரும்புகிறது. இந்தியா – சீனா இடையேயான பிரச்னைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். சிக்கல்களைப் புரிந்தும் வைத்திருக்கிறோம். ஆனாலும், சிக்கல்கள் பெரிதாவதை அமெரிக்கா தவிர்க்கவே நினைக்கிறது. பதற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொள்ள விரும்புகிறது.இவ்வாறு கூறியுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…