பெற்றோருக்கு கொரோனா -15 நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி…!

Published by
Edison
  • பெற்றோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் 15 நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள அரசு ஊழியர்களுக்கு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது பரவி வரும் நிலையில்,அரசு ஊழியர்களுக்கு பல்வேறு  நிவாரண உதவிகளை அரசு வழங்கி வருகிறது.

அந்த வகையில்,மத்திர அரசு ஊழியர்களின் பெற்றோர் அல்லது அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால்,அந்த ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கான சிறப்பு நேர்வு விடுப்பு அளிக்கப்படும் என்று மத்திய பணியாளர் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து,அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

  • மத்திய அரசின் ஊழியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு,வீட்டில் தனிமையில் இருந்தால் அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால்,அவருக்கு 20 நாட்கள் வரை,பயண விடுப்பு, எஸ்சிஎல் அல்லது ஊதியத்துடன் கூடிய விடுப்பு (EL) வழங்கப்படும்.
  • ஊழியருக்கு தொற்று உறுதியாகி 20 நாளுக்கு பிறகும் குணமடையாமல் மருத்துவமனையில் இருந்தால்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான ஆவண ஆதாரங்களை காண்பித்த பின்னர் அவருக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படும்.
  • ஊழியரின் பெற்றோர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால்,அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளிவரும் வரை அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கான எஸ்சிஎல்-ஐத் தாண்டி  விடுமுறை அனுமதிக்கப்படும்.
  • இந்த உத்தரவானது கடந்த ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
Edison

Recent Posts

INDvsNZ : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ‘இந்தியா’! போராடி வீழ்ந்தது நியூசிலாந்து!

INDvsNZ : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ‘இந்தியா’! போராடி வீழ்ந்தது நியூசிலாந்து!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…

8 hours ago

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

11 hours ago

உக்ரனை அடுத்து ஈரான்? அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட வேண்டும். இல்லையென்றால்? டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…

12 hours ago

INDvsNZ : தடுமாறும் நியூசிலாந்து! பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

13 hours ago

4 மாவட்டங்களில் மிக கனமழை! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…

16 hours ago

சாமி இந்தியா ஜெயிக்கணும்.., மும்பை, உஜ்ஜயினி, லக்னோ கோயில்களில் சிறப்பு பூஜைகள்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…

17 hours ago