ஜம்மு – காஷ்மீருக்கான இருப்பிட சட்டத்தை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஜம்மு – காஷ்மீருக்கான இருப்பிட சட்ட அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஜம்மு-காஷ்மீரில், 15 ஆண்டுகள் தங்கி இருந்தவர்கள் அல்லது 7 ஆண்டுகள் தங்கி, 10 அல்லது 12 வகுப்பு தேர்வு எழுதியவர்கள், யூனியன் பிரதேசத்தின் இருப்பிட சான்றிதழ் பெற தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர் என்றும் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள், ஜம்மு – காஷ்மீரில் குறைந்தது, 10 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், அவர்களின் குழந்தைகள், யூனியன் பிரதேசத்தின் இருப்பிட சான்றிதழ் பெற தகுதியுடையவர்களாக கருதப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வசிப்பவர்களின் குழந்தைகள், தொழில் அல்லது கல்வி காரணமாக வேறு மாநிலங்களில் வசித்தாலும் அவர்கள் பெற்றோர் விரும்பினால், அவர்களுக்கு யூனியன் பிரதேசத்தின் இருப்பிட சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இவர்கள் ஜம்மு – காஷ்மீர் அரசு பணிகளில் சேர தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர். ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு பணிகளில் ‘குரூப் – 4’ வரை இருப்பிடச் சான்றிதழ் பெற்றவர்களுக்கே கிடைக்கும் வகையில், இடஒதுக்கீடு வழங்கப்படும் என, மத்திய அரசு, நேற்று அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“ஹிந்தியால் 56 இந்திய மொழிகள் அழிந்துவிட்டன., தமிழுக்கும் அதே நிலைமை?” அன்பில் மகேஷ் விரிவான விளக்கம்!

“ஹிந்தியால் 56 இந்திய மொழிகள் அழிந்துவிட்டன., தமிழுக்கும் அதே நிலைமை?” அன்பில் மகேஷ் விரிவான விளக்கம்!

திருச்சி : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் PM Shri திட்டத்தின் கீழ் தமிழகம் சேராதது வரையில் தமிழ்நாட்டிற்கு நிதி…

20 minutes ago

பிரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ நெருப்பை கக்கியதா? இல்ல வெறுப்பை கக்கியதா? நெட்டிசன்கள் சொல்வெதென்ன…

சென்னை : நடிகர் பிரதீப் ரங்கநாதனின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ' டிராகன் ' திரைப்படம் இறுதியாக இன்றைய தினம் திரையரங்கில்…

1 hour ago

SAvAFG : டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா! போட்டியில் வெற்றி பெறுமா ஆப்கானிஸ்தான்?

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டி பாகிஸ்தானின்…

1 hour ago

“கல்விநிதி விவகாரத்தில் அரசியல் செய்வது நாங்கள் இல்லை” – உதயநிதி ஸ்டாலின்.!

சென்னை : கல்விக்கு நிதி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தான் அரசியல் செய்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி…

3 hours ago

கல்வியை அரசியல் ஆக்காதீங்க..மும்மொழியை ஏத்துக்கோங்க! தர்மேந்திர பிரதான் கடிதம்

டெல்லி : மும்மொழி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இன்னுமே தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை…

3 hours ago

சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து.? வெளிச்சத்துக்கு வந்த மணமுறிவுக்கான காரணம்.!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹலும், அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் பரஸ்பர விவாகரத்துப் பெற செய்துள்ளனர்.…

3 hours ago