ஜம்மு – காஷ்மீருக்கான இருப்பிட சட்ட அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஜம்மு-காஷ்மீரில், 15 ஆண்டுகள் தங்கி இருந்தவர்கள் அல்லது 7 ஆண்டுகள் தங்கி, 10 அல்லது 12 வகுப்பு தேர்வு எழுதியவர்கள், யூனியன் பிரதேசத்தின் இருப்பிட சான்றிதழ் பெற தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர் என்றும் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள், ஜம்மு – காஷ்மீரில் குறைந்தது, 10 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், அவர்களின் குழந்தைகள், யூனியன் பிரதேசத்தின் இருப்பிட சான்றிதழ் பெற தகுதியுடையவர்களாக கருதப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வசிப்பவர்களின் குழந்தைகள், தொழில் அல்லது கல்வி காரணமாக வேறு மாநிலங்களில் வசித்தாலும் அவர்கள் பெற்றோர் விரும்பினால், அவர்களுக்கு யூனியன் பிரதேசத்தின் இருப்பிட சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இவர்கள் ஜம்மு – காஷ்மீர் அரசு பணிகளில் சேர தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர். ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு பணிகளில் ‘குரூப் – 4’ வரை இருப்பிடச் சான்றிதழ் பெற்றவர்களுக்கே கிடைக்கும் வகையில், இடஒதுக்கீடு வழங்கப்படும் என, மத்திய அரசு, நேற்று அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…