உண்மை இந்த சர்வாதிகாரத்திற்கு முடிவு எழுதியே தீரும் – ராகுல் காந்தி

Default Image

போலீஸ் மற்றும் அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துத்தி எங்களை நீங்கள் கைது செய்தாலும் நீங்கள் எங்கள் குரலை நசுக்க முடியாது என ராகுல் காந்தி ட்வீட். 

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் 2-வது நாளாக இன்று அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

இந்த நிலையில், டெல்லியில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். அப்போது போலீசார், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்களை கைது செய்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சர்வாதிகாரத்தைப் பாருங்கள். அமைதி வழிப் போராட்டம் நடத்த இயலவில்லை, பணவீக்கம் குறித்தோ, வேலை இல்லா திண்டாட்டம் குறித்தோ விவாதிக்க முடியவில்லை. போலீஸ் மற்றும் அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துத்தி எங்களை நீங்கள் கைது செய்தாலும் நீங்கள் எங்கள் குரலை நசுக்க முடியாது. உண்மை இந்த சர்வாதிகாரத்திற்கு முடிவு எழுதியே தீரும்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்