உண்மை கண்டறியும் சோதனை…!நான் ரெடி …!நீங்க ரெடியா …!புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண் பேடி சவால்
உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தயாரா? என்று ஆளுநர் கிரண் பேடி சவால் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி கூறுகையில், உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தயாரா? என்று சவால் விடுத்துள்ளார். இருவரையும் உண்மை கண்டறியும் சோதனைக்குட்படுத்தி அதை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் .புதுச்சேரி முதல்வர் தொடர்ந்து என் மீது பொய்களும், புகார்களும் தெரிவிப்பது தொடர்கிறது என்றும் ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.