கொரோனா இரண்டாம் அலையை விட மூன்றாம் அலை உக்கிரமாக இருக்கும் – டெல்லி முதல்வர்!

Published by
Rebekal
  • டெல்லியில் கொரோனாவின் இரண்டாம் அலை மிக அதிகளவிலான உயிரிழப்புகளை பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
  • கொரோனா இரண்டாம் அலையை விட மூன்றாம் அலை உக்கிரமாக இருக்கலாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மிக அதிகளவில் பரவியதுடன், அதிகப்படியான பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா இரண்டாம் அலையால் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் விரைவில் வரவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதுடன் இந்த மூன்றாம் அலையில் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வது எப்படி என்பதற்கான ஆலோசனை கூட்டத்தை முதல்வர் அரவிந் கெஜ்ரிவால் காணொலி மூலமாக நடத்தியுள்ளார்.

அப்பொழுது பேசிய அவர், கொரோனா மூன்றாம் அலையில் நாளொன்றுக்கு 37 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாகவும், இதனை எதிர்கொள்ளும் விதமாக டெல்லியில் 64 ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகள் நிறுவப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், புதியவகை வைரஸ்களை கண்டறிய இரண்டு ஆராய்ச்சி கூடங்களும் அமைக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், கொரோனா இரண்டாம் அலையை விட மூன்றாம் அலை உக்கிரமாக இருக்கும் எனவும், இதில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளதால் இதனை தவிர்ப்பதற்காக ஆலோசனை குழு அமைக்கவும், தேவையான மருத்துவக்கட்டமைப்பை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

பரபரக்கும் சட்டப்பேரவை., வெளியேறினார் அப்பாவு! ஆதரவளித்த செங்கோட்டையன்! 

பரபரக்கும் சட்டப்பேரவை., வெளியேறினார் அப்பாவு! ஆதரவளித்த செங்கோட்டையன்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

19 minutes ago

“தொடை நடுங்கி திமுக.., உங்களால் என்ன செய்ய முடியும்?” அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…

56 minutes ago

“சினிமா கவர்ச்சியின் மூலம் இளைஞர்களை திசைமாற்றி விட முடியாது” – திருமாவளவன்.!

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…

2 hours ago

நம்பிக்கை இல்லா தீர்மானம் : ஒன்றிணைந்த அதிமுக! விலகி நிற்கும் செங்கோட்டையன்!

சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…

2 hours ago

LIVE : தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் முதல்… பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி கருத்து வரை.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…

2 hours ago

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் – வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா.!

சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…

3 hours ago