திருட வந்த இடத்தில் “திருடுவது தவறு” என கடிதம் எழுதிய திருடன்..!

Published by
Surya
  • தான் திருட வந்த வீட்டில் “திருடுவது தவறு” என கடிதம் எழுதி வாய்த்த திருடன்.
  • காவல் துறையின் திசையை திருப்பவே அவன் இந்த செயலை செய்திருப்பான் என காவல் துறையினர் கூறிவருகின்றனர்.

கேரளா மாநிலம், திருவன்குளத்தை சேர்ந்தவர், ஐசக் மணி. கடந்த சில தினங்களாக வெளிஊர் சென்றார். வீடு திரும்பிய அந்த ராணுவவீரர் வீட்டில் பூட்டு உடைந்திருப்பதை பார்த்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர் கூறியதாவது,

திருடன் ஒருவன், ஒரே நாளில் 6 இடங்களில் திருடுவதாக முடிவெடுத்துள்ளான். ஐந்து வீடுகளில் திருடிய அந்த திருடன், ஆறாவதாக ஒரு வீட்டிற்குள் திருட வந்துள்ளான். அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததும் அது ஒரு முன்னாள் ராணுவ வீரரின் வீடு என்பது தெரியவந்தது. இதனை அறிந்த அந்த திருடன், அந்த வீட்டின் இருந்த சரக்கில் ஒரு டம்பளர் குடித்து, கடிதம் ஒன்றை எழுதி வைத்து சென்றுள்ளான்.

அவன் எழுதிய கடிதத்தில், “இது ராணுவ வீரரின் வீடு என தெரிந்தால் வீட்டின் பூட்டை கூட உடைத்திருக்கமாட்டேன்”. மேலும் அதில் “திருடுவது தவறு” என கூறி, தான் திருடிய பையையும் அந்த ராணுவ வீரரின் வீட்டில் வைத்துவிட்டு காவல்துறைக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தான்.

அதில் அவன், “இந்த பையிலுள்ள பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடுங்கள்” எனவும் கூறினார். திருடன், காவல் துறையின் திசையை திருப்புவதற்காகவே அவன் இந்த செயலை செய்திருப்பான் என காவல் துறையினர் கூறினார்கள்.

Published by
Surya

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago