திருடிச் சென்ற 17000 கொரோனா தடுப்பூசிகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி வைத்து சென்ற திருடன்!

Published by
Rebekal

ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து 1700 கொரோனா  வைரஸ் தடுப்பூசிகளை திருடிச் சென்ற திருடன் ஒருவன், மன்னிப்பு கடிதத்துடன்  மீண்டும் மருத்துவமனையிலேயே வைத்துச் சென்றுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு இடங்களிலும் போடப்பட்டு கொண்டிருக்கிறது. ஆங்காங்கே சில போலியான கொரோனா தடுப்பூசிகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 1,700 கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து திடீரென காணாமல் போயுள்ளது.

எனவே மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இன்றி மருத்துவமனை நிர்வாகம் திணறி வந்துள்ளது. ஆனால் கொரோனா  தடுப்பூசிகளை திருடிய திருடன் தற்போது தனது தவறை உணர்ந்து திருடிய தடுப்பூசி மருந்துகளை மருத்துவமனையிலேயே வைத்து விட்டுச் சென்றுள்ளான்.

அதுமட்டுமில்லாமல் அந்த தடுப்பூசிகள் உடன் ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதி வைத்துள்ளான்.அதில், பொதுமக்களுக்காக வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகளை திருடியதற்காக தான் வருந்துவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்பொழுது தடுப்பூசிகள் கிடைத்து விட்டாலும் திருடியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தடுப்பூசிகள் மீண்டும் வைக்கப்பட்டு விட்டதால் அந்த மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்

Published by
Rebekal

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 min ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

13 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

34 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

36 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

54 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

1 hour ago