ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து 1700 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை திருடிச் சென்ற திருடன் ஒருவன், மன்னிப்பு கடிதத்துடன் மீண்டும் மருத்துவமனையிலேயே வைத்துச் சென்றுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு இடங்களிலும் போடப்பட்டு கொண்டிருக்கிறது. ஆங்காங்கே சில போலியான கொரோனா தடுப்பூசிகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 1,700 கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து திடீரென காணாமல் போயுள்ளது.
எனவே மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இன்றி மருத்துவமனை நிர்வாகம் திணறி வந்துள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசிகளை திருடிய திருடன் தற்போது தனது தவறை உணர்ந்து திருடிய தடுப்பூசி மருந்துகளை மருத்துவமனையிலேயே வைத்து விட்டுச் சென்றுள்ளான்.
அதுமட்டுமில்லாமல் அந்த தடுப்பூசிகள் உடன் ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதி வைத்துள்ளான்.அதில், பொதுமக்களுக்காக வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகளை திருடியதற்காக தான் வருந்துவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்பொழுது தடுப்பூசிகள் கிடைத்து விட்டாலும் திருடியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தடுப்பூசிகள் மீண்டும் வைக்கப்பட்டு விட்டதால் அந்த மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…