திருடிச் சென்ற 17000 கொரோனா தடுப்பூசிகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி வைத்து சென்ற திருடன்!

Published by
Rebekal

ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து 1700 கொரோனா  வைரஸ் தடுப்பூசிகளை திருடிச் சென்ற திருடன் ஒருவன், மன்னிப்பு கடிதத்துடன்  மீண்டும் மருத்துவமனையிலேயே வைத்துச் சென்றுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு இடங்களிலும் போடப்பட்டு கொண்டிருக்கிறது. ஆங்காங்கே சில போலியான கொரோனா தடுப்பூசிகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 1,700 கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து திடீரென காணாமல் போயுள்ளது.

எனவே மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இன்றி மருத்துவமனை நிர்வாகம் திணறி வந்துள்ளது. ஆனால் கொரோனா  தடுப்பூசிகளை திருடிய திருடன் தற்போது தனது தவறை உணர்ந்து திருடிய தடுப்பூசி மருந்துகளை மருத்துவமனையிலேயே வைத்து விட்டுச் சென்றுள்ளான்.

அதுமட்டுமில்லாமல் அந்த தடுப்பூசிகள் உடன் ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதி வைத்துள்ளான்.அதில், பொதுமக்களுக்காக வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகளை திருடியதற்காக தான் வருந்துவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்பொழுது தடுப்பூசிகள் கிடைத்து விட்டாலும் திருடியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தடுப்பூசிகள் மீண்டும் வைக்கப்பட்டு விட்டதால் அந்த மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்

Published by
Rebekal

Recent Posts

டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: பாஜக தொடர் முன்னிலை.!

டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: பாஜக தொடர் முன்னிலை.!

டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்…

16 minutes ago

LIVE : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்… டெல்லி – ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள்!

சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…

1 hour ago

TNPSC : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…

1 hour ago

வெல்லப் போவது யார்? சற்று நேரத்தில் ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.!

சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…

2 hours ago

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

14 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

14 hours ago