உலகிலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை – இன்று திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

Default Image

கர்நாடகா:161 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

கர்நாடகா மாநிலம் துமகூரு அருகே பிதனகெரே கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 161 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலையை  பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். ராமநவமியையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்காக பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக ஆஞ்சநேயர் சிலையை திறந்து வைக்க உள்ளார்.ஆஞ்சநேயர் சிலை திறப்பு விழாவுக்கு கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமை தாங்க உள்ளார்.

இந்த ஆஞ்சநேயர் சிலையானது உலகிலேயே மிகவும் உயரமான சிலையாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்