மகாராஷ்டிராவில் பல திருப்பங்களுக்கு பிறகு புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா தொடங்கியது..!

Published by
murugan

மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை காலை  தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் ,அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.இதை தொடர்ந்து காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ,சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.
இதை அடுத்து அஜித் பவார் துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா அறிவித்து ஆளுநரிடம்  தனது  ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
இந்நிலையில் நேற்று மாலை இடைக்கால சபாநாயகராக  காளிதாஸ் கொலம்ப்கர் தேர்வு செய்ய செய்யப்பட்டு பதவியேற்ற நிலையில் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர். புதிய எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட காளிதாஸ் கொலம்ப்கர் பதவி பிரமாணம் செய்து வருகிறார்.
கடந்த மாதம் 21-ம் தேதி 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலுக்கான முடிவு கடந்த மாதம் 24-ம் தேதி வெளியானது.இதில் பாஜக 105 , சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54 மற்றும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் முடிந்த நிலையில் பல திருப்பங்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் இன்று வெற்றிபெற்ற புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்று வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

3 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

21 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

21 hours ago