கொலீஜியம் பரிந்துரைகள்… மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.!

Supreme court of India

மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை நியமிக்க  உச்சநீதிமன்ற 5 மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் அமைப்பு குறிப்பிட்ட நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்வர் .

அந்த கொலிஜியம் அமைப்பின் பரிந்துரையானது மத்திய அரசுக்கு அனுப்பப்படும். மத்திய சட்டத்துறை அதில் குறிப்பிட்ட நீதிபதிகளின் பெயர்களை ஒப்புதல் அளித்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவார்கள். குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்ற பின்னர் பணி நியமனம் செய்யப்படும்.

சத்தீஸ்கர் தேர்தல்: 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு.!

இந்த நடைமுறைகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய நீதிபதி அமர்வு அதிருப்தியை தெரிவித்துள்ளது. கொலீஜியம் சில பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறது. ஆனால அதில் ஒரு சிலரை மட்டும் ஏற்றுக்கொண்டு, சிலரை அங்கீகரிக்காமல் அப்படியே கிடப்பில் வைத்து விடுகிறார்கள். இது நீதித்துறை மீது இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதை குறைக்கும் வகையில் அமைந்துவிடும் என்றும்,

சில நீதிபதிகளின் பெயர்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அதை கொலீஜியம் அனுமதிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அது உங்களுக்கு (மத்திய அரசு) சம்மதமா.? உங்கள் முடிவின்படி, யாரோ ஒருவர் நீதிபதியாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார், நாங்கள் அதனை ஏற்கவில்லை.

ஏற்கனேவே, பஞ்சாப் , ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு கொலிஜியம் 5 நீதிபதிகள் பெயரை பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசு 3 நீதிபதிகள் பெயரை தான் அங்கீகரித்தார்கள் என ஒரு சில உதாரணங்களையும் நீதிபதி அமர்வு தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் மத்திய அரசிடம் தெரிவிக்கிறோம் என மத்திய அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் கூறினார். இதனை அடுத்து இந்த வழக்கானது நவம்பர் 20ஆம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்