மேற்கு வங்கத்தில் பசுமை பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பட்டாசுகளுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில்,பசுமை பட்டாசுகள் வெடிக்க தற்போது உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பட்டாசு விற்கவும்,வெடிக்கவும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் முன்னதாக தடை விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவுக்கு எதிராக பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,எந்தவிதமான அடிப்படை விசயங்களையும் அலசி ஆறாயாமல் கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏனெனில், உச்சநீதிமன்றம்,தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் படி பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமது உள்ளது.இதனால்,ஒட்டுமொத்தமாக பட்டாசு வெடிக்க தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி,மேற்கு வங்கத்தில் ,பசுமை பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும்,பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவானது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தும்,அதிலிருந்து மேற்கு வங்கம் மாநிலம் மட்டும் விலக்கு பெறமுடியாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…