உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறையானது வருகின்ற மே 10 முதல் ஜூன் 27 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடைப்பட்ட காலத்தில் உச்சநீதிமன்ற வளாகமானது,கொரோனா மையமாக மாற்றப்படவுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பானது 4 லட்சத்தை எட்டியுள்ளது.இதன்காரணமாக,பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.மேலும்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான தடுப்பூசி மருந்துகள்,படுக்கை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரி ஒருவர் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில்,”வருகின்ற மே 10 ஆம் தேதி முதல் ஜூன் 27ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை ஆரம்பமாகிறது.எனினும்,சிறப்பு அமர்வு நீதிபதிகள் கொண்ட விசாரணையானது வழக்கம்போல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும்.
இதனையடுத்து,இதற்கிடைப்பட்ட காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் வளாகங்கள் அனைத்தும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா பரிசோதனை செய்வதற்கான மையமாக மாற்றிக் கொள்ளப்படும்.இதனால்,இந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறையானது ஒரு வாரத்திற்கு முன்னரே ஆரம்பமாகும் எனவும்,இதற்கு தலைமை நீதிபதி தரப்பிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…