தேர்தல் இலவச வாக்குறுதி வழக்கு… ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.!

Default Image

அரசியல் கட்சியினர் தேர்தலில் வெற்றிபெற இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருவதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.   

நாட்டில் நடைபெறும் தேர்தல்களின் போது அரசியல் கட்சியினர் மக்களை கவர்வதற்கு இலவச அறிவிப்புகளை அறிவித்து வருவர்.

இந்த தேர்தல் இலவச அறிவிப்புகளை எதிர்த்து பாஜக முக்கிய தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்து இருந்தார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஒரே நோக்கத்தால் இந்த இலவச அறிவிப்புகள் வெளியிட்டு வருகின்றன எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் மத்திய அரசுக்கு சில கேள்விகளை நீதிபதி எழுப்பி இருந்தார். மத்திய அரசு ஏன் உறுதியான உத்தரவுகளை இந்த இலவசங்கள் தொடர்பாக பிறப்பிக்கவில்லை. இலவசங்கை நிதி ஆணையம் கண்காணிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தது.

மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்