கால் விரல்களால் தேர்வு எழுதி 12-ம் வகுப்பு தேர்வில் 70% மதிப்பெண் பெற்ற மாணவன்…!

Published by
லீனா

உத்திரபிரதேசம் மாநிலம், லக்னோவில், துஷார் என்ற மாணவன், கால் விரல்களால் தேர்வு எழுதி 12-ம் வகுப்பு தேர்வில் 70% மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

உத்திரபிரதேசம் மாநிலம், லக்னோவில், துஷார் என்ற மாணவனுக்கு, பிறந்ததிலிருந்தே இரண்டு கைகளும் செயல்படவில்லை. இந்நிலையில், துஷார், 12-ம் வகுப்பில், தனது கால் விரல்களால், தேர்வெழுதி 70% மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இதுகுறித்து, துஷார் கூறுகையில், பிறந்ததிலிருந்து என் இரண்டு கைகளும் செயல்படவில்லை, ஆனால் நான் அதை ஒரு குறைபாடாக ஒருபோதும் கருதவில்லை. என் மூத்த சகோதரர்கள் இருவரும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியபோது, ​​நான் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று என் பெற்றோரிடம் கேட்டேன், ஆனால் நான் எப்படி எழுதுவது என்பது தடையாக இருந்தது. என் உடன்பிறப்புகள் படிக்கும்போது, நான் என் கால்விரல்களை என் கைகளாக மாற்றி  எழுத ஆரம்பித்தேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நான் எனது கால்விரல்களால் தேர்வுகளை எழுதும் போது, விடைத்தாள்களை அழகாக காண்பிக்க கருப்பு மற்றும் நீல பேனாக்களை பயன்படுத்தி எழுதினேன் என தெரிவித்துளளார். துஷாருக்கு பொறியியலாளர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. அவரது தந்தை, ராஜேஷ் விஸ்வகர்மா ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அவர் தனது மகனின் படிப்புக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார்.

தனது தனத்தை குறித்து துஷார் கூறுகையில், எனது தந்தை என்னை பள்ளியில் சேர்ப்பதற்கு மிகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர் கொண்டார். அவர் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று எண்ணை சேர்ப்பதற்காக போராடினார். இறுதியில் ஒரு பள்ளியில் சேர்த்தார். நான் எனது இயலாமையை வென்று என் கால் விரல்களால் எழுத ஆரம்பித்தேன்.

 கால் விரல்களால் என் புத்தகங்களில் பக்கங்களையும் என்னால் திருப்ப முடியும். மேலும் தன்னை ஆதரித்த ஆசிரியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். அவர்கள் என்னை தரையில் அமர்ந்து தேர்வுகளை எழுத அனுமதித்தனர். எனது மதிப்பெண்களை குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் பத்தாம் வகுப்பில் 67 சதவீத மதிப்பெண்களைப் பெற்றேன். தற்போது நான் பனிரெண்டாம் வகுப்பு 70 சதவீத மதிப்பெண்களைப் பெற்று உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago