தேர்வு எழுதிய மாணவி, இறந்துபோன தந்தை – உருக்க வைக்கும் நிகழ்வு

Published by
Surya
  • திருப்பூர், அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பேருந்து விபத்தில் 19 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
  • இந்த விபத்தில் தந்தை இறந்தது தெரியாமல் மாணவி தேர்வு எழுதிய சம்பவம், மனதை உலுக்கியது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற பேருந்து லாரி மோதியதால் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்தப் பேருந்தின் நடத்துனர் குடும்பம் குறித்த கண்களை கலங்க வைக்கும் தகவல் வெளியாகியது.

எர்ணாகுளம் அருகே உள்ளது வெளிய நாடு என்ற ஒரு கிராமம். அந்தக் கிராமத்தை சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி பவித்ரா பைஜு. இவர் அங்கு உள்ள செயின்ட் பால் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் தந்தை பைஜு. 47 வயதாகும் அவர் கேரள போக்குவரத்து கழகத்தில் பெங்களூர்-எர்ணாகுளம் வழியாக செல்லும் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் அவரும் ஒருவர். அவளது மகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு புறப்பட்டு சென்றாள்.

Image result for tirupur accident

அப்பொழுது பைஜு இறந்த விஷயம் அவரின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் பவிதா தேர்வு எழுதிக் கொண்டே இருந்ததால் அவளுக்கு தெரிவிக்கவில்லை. மாலை பள்ளி முடியவும் அவள் அவளது தோழியின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து அவரது உறவினர் ஒருவர் அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்பொழுதுதான் அவளுக்கு அவளது தந்தை இறந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட அவர் மிகுந்த அதிர்ச்சியாகி, அழுக தொடங்கிட்டாள் என ஊர் பஞ்சாயத்து தலைவர் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார். தந்தை இறந்தது தெரியாமல் மாணவி தேர்வு எழுதிய சம்பவம், கண்களில் கண்ணீரை வடியச் செய்தது.

Published by
Surya

Recent Posts

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…

2 hours ago

கருப்பு பெயிண்ட் அடிக்கிற முன்னாடி ஸ்கூல் போய் படிச்சிட்டு வாங்க…அண்ணாமலை பேச்சு!

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…

3 hours ago

சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…

4 hours ago

AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!

ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான  சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…

5 hours ago

எடுத்தது ஒரு விக்கெட் எதுக்கு இந்த சீன்? அப்ரார் அகமதை விளாசிய வசீம் அக்ரம்!

துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…

6 hours ago

மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!

சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…

6 hours ago