Baba Ramdev [Image source : PTI]
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் மிகவும் வேதனை அளிக்கிறது. சம்பந்தப்பட்ட பாஜக எம்பியை கைது செய்ய வேண்டும் என பாபா ராமதேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளத் தலைவரும், உத்திர பிரதேச பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்து, அவரை கைது செய்ய வேண்டும் என் மல்யுத்த வீராங்கனைகள் பல வாரங்களாக டெல்லி ஜந்தர் மாந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை தொடர்ந்து சரண் சிங் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்கள் கூறி வருகின்றனர். பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு பாபா ராமதேவ் ஆதரவு தெரிவித்துள்ளார் . மேலும் அவர் கூறுகையில், நமது நாட்டின் மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் அமர்ந்து மல்யுத்த சம்மேளத் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருக்கும் செயல் மிகவும் வெட்கக்கேடான விஷயம். அப்படிப்பட்டவரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அங்கு போராடுபவர்கள் நமது சகோதரிகள் மற்றும் மகள்கள், இது மிகவும் கண்டிக்கத்தக்க தீய செயல், பாவச்செயல் என பாபா ராமதேவ் கடுமையாக விமரிசித்து உள்ளார்.
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…