75 வருடங்களாக ரக்ஷா பந்தன் கொண்டாடாத உத்திரப்பிரதேசத்தின் கிராமம்!

Published by
Rebekal

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட கூடிய ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவதே இல்லையாம், ஏன் என்று தெரியுமா? வாருங்கள் அறிவோம்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  கோண்டா மாவட்டத்தில் உள்ள துமாரியாதி வட்டத்தில் உள்ள சிறிய கிராமம் பிகாம்புர் ஜகத் புர்வா. இந்த கிராமத்தில் கடந்த 75 வருடங்களாக ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுவது இல்லையாம். சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதற்காகவும், அதிகப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த ரக்ஷா பந்தன் கடந்த 75 வருடங்களாக இந்த கிராமத்திலும் இதைச் சுற்றியுள்ள மற்ற சிறு சிறு கிராமங்களிலும் கொண்டாடபடாமல் இருக்கிறதாம்.

ஏன் ரக்ஷா பந்தன் என்னும் பெயரை உச்சரிப்பது கூட அங்குள்ள மக்கள் விரும்புவதில்லையாம். சிறியவர் முதல் பெரியவர்கள் வரையிலும் இந்த விழாவைக் கொண்டாடக் கூடாது என்ற ஒரு நம்பிக்கைதான் ஊறிக் கிடக்கிறது. ஏன் தெரியுமா? இதுகுறித்து அங்குள்ள சூரியநாராயணன் மிஸ்ரா எனும் பெரியவர் கூறும்பொழுது, கடந்த 1955 ஆம் வருடத்தில் ரக்ஷா பந்தன் தினத்தன்று எங்கள் குடும்பத்திலுள்ள இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டான். அதிலிருந்து அன்றைய தினத்தில் இந்த ரக்ஷா பந்தன் விழாவில் ராக்கி கட்டி கொள்வது நல்லதல்ல என்று இங்குள்ள இளம் பெண்கள் அஞ்சுகிறார்கள்.

இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை மட்டும் சில பெண்களின் வற்புறுத்தலால் இணங்கி இந்த ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது அப்பொழுது ராக்கி கட்டி கொண்டு ஒருவரில் ஒருவர் அதே தினத்தன்று விரும்பத்தகாத சம்பவத்திற்கு உள்ளானார். அதிலிருந்து யாருமே இங்கு ராக்கி கட்டி கொள்ளவோ அல்லது அந்த பண்டிகை பெயரை உச்சரிப்பதற்க்கோ விரும்புவதில்லை என அவர் கூறியுள்ளார். இதுதான் அந்த இடத்தில் ரக்ஷா பந்தன் கொண்டாடாமல் இருப்பதற்கு காரணமாக உள்ளது.

Published by
Rebekal

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

11 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

12 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

12 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

12 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

13 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

14 hours ago