கர்நாடகாவில் நாளை முதல் திரையரங்குகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி!

Default Image

கர்நாடகாவில் நாளை முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாளை முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குள் மற்றும் மல்டிபிளக்ஸ்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது நிகழ்ச்சி நடைபெறும் ஆடிட்டோரியம் போன்ற இடங்களிலும் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதுபோன்று, வரும் 26 முதல் உயர்கல்வி நிறுவனங்களைத் திறக்க முடிவு செய்து உள்ளதாகவும், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இரவு நேரத்துக்கான ஊரடங்கு 9 மணிக்குப் பதில் 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கர்நாடகாவில்  கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு கூடுதல் தளர்வுகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடகாவில் இன்று மட்டும் 24 மணி நேரத்தில் 1,708 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் அம்மாநிலத்தில் கொரோனாவால் 28,83,947 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 36,157 ஆகவும், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,18,476 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்