புதிய ஆடை வாங்க பணம் கொடுக்காததால் தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்…!

Default Image

ஒடிசாவில் புதிய ஆடை வாங்க பணம் கொடுக்காததால் தாயை, மகன் கோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசாவில், கியோன்ஜார் மாவட்டத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் பண்டிகையை முன்னிட்டு தனது தாயாரிடம் புதிய ஆடை வாங்க பணம் கேட்டுள்ளார். அவரது தாயார் பணம் கொடுக்க மறுத்ததால், தாயாரை கோடாரியால் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்துள்ளார்.

நாயக்கோட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணமணி ஹெம்ப்ராம் கூறுகையில், குற்றம்சாட்டப்பட்ட 10 வயது சிறுவன் ண்டிகையை முன்னிட்டு தனது தாயாரிடம் புதிய ஆடை வாங்க பணம் கேட்டுள்ளார். அவரது தாயார் பணம் கொடுக்க மறுத்ததால், தாயாரை கோடாரியால் தாக்கியதாக கூறியுள்ளார்.

மேலும், முஹா பலமுறை கோரிக்கை விடுத்தும் பணத்தை வழங்க மறுத்ததால், அவர் அவளை கோடரியால் தாக்கினார். அவள் சம்பவ இடத்திலேயே இறந்தாள். அவள் இறந்த பிறகும் சிறுவன் கழுத்தை அறுக்க முயன்றான் எனக் கூறியுள்ளார்.

காவல்துறையினர் இறந்த தாயாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்