கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்தியாவையும் அது விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் ஓரளவு இதன் பாதிப்பில்லாமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தற்போது இந்தியாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இந்நிலையில், வருகின்ற 14 ஆம் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சில பொறுப்பற்ற குடிமகன்கள் இந்த 144 தடை உத்தரவை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வெளியில் சுற்றி வருகின்றனர்.
அதுபோல தற்போது டெல்லியில் வசந்த்கஞ்ச் வசிக்கும் பகுதியில் வசித்து வரக்கூடிய 30 வயது வாலிபர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதாவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்ட பின்பும் தனது தந்தை வீட்டை விட்டு அடிக்கடி வெளியே சுற்றி வருவதாகவும் அரசு உத்தரவுகள் முறையாகப் பின்பற்ற வில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த புகாரை அடுத்து போலீசார் அவரது தந்தை மீது எப்.ஐ.ஆர் செய்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். தந்தையை மகனே சொல்லி கொடுத்தது ஆச்சரியமாக இருந்தாலும் இது ஒரு விதத்தில் நல்ல குடிமகனுக்கு அழகு தான்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…