Categories: இந்தியா

8 வயது சிறுமியின் பாலியல் வழக்கை தீர்த்து வைத்த மோப்ப நாய்..! வைரலாகும் வீடியோ ..!

Published by
அகில் R

ஆந்திர பிரதேசம் : 8 வயது சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை போலீசாரின் மோப்ப நாய் அதிரடியாக கண்டுபிடித்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நந்தியால் மாவட்டத்தில் இருக்கும் பகிடியாலா மண்டலத்தில் உள்ள முச்சுமரி கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று  8 வயது சிறுமி  தனது வீட்டிலிருந்து நண்பர்களுடன் உள்ளூர் பூங்காவிற்கு விளையாட சென்ற சிறுமி மாலை வரை வீடு திரும்பாததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், உடனடியாக சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பல இடங்களில் சோதனை நடத்தி வந்துள்ளனர். மேலும், இந்த தேடுதல் பணியில் உதவுவதற்கு ஒரு மோப்ப நாயை பயன்படுத்தியுள்ளனர். இதில் ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம் அரங்கேறி உள்ளது. அந்த மோப்ப நாய் போலீசார்களை குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீட்டையும் கண்டறிந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் குற்றவாளிகளாக போலீசார் கைது செய்து முதற்கட்டமாக விசாரித்துள்ளனர். அதில் அந்த குற்றவாளிகள் தாங்கள் தான் குற்றம் செய்தோம் என குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுவது என்னவென்றால், “அந்த 3 சிறுவர்ககளும் தான் கோலை செய்துள்ளனர் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் அந்த சிறுமியுடன் ஒன்றாக விளையாடலாம் என ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமையை முச்சுமரி பாசனத் திட்டத்தின் கீழ் ஒதுக்குப்புறமான இடத்திற்கு கொண்டு சென்று, அந்த சிறுமியின் வாயை மூடிக்கொண்டு மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

பின், நடந்த சம்பவத்தை மறைப்பதற்காக  சிறுமியை கொன்று, பாசன கால்வாயில் உடலை வீசியுள்ளனர்”, என்று தெரிவித்துள்ளனர். மேலும், கால்வாயில் நீர்மட்டம் ஆழமாக உள்ளதாலும், பருவ மழை காரணமாக அந்த சிறுமியின் உடல் வெகுதூரம் அடித்துச் செல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாலும், சிறுமியின் உடலை போலீசார் இதுவரை மீட்கவில்லை. இதனால், சடலத்தை மீட்கும் பணி தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent Posts

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

10 minutes ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

40 minutes ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

3 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

3 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

4 hours ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

15 hours ago